Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரசு ஆடவர் கல்லூரியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

ஜுலை 26, 2019 03:33

கும்பகோணம்: கும்பகோணத்தில் அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவிகள் 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவிகள் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்தும் மத்திய அரசு சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழியை திணிப்பதாக கூறி பதாதைகளை ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய மாநில அரசுகள் உடனடியாக புதிய கல்விக் கொள்கையை கைவிடாவிட்டால் மாணவர்களின் போராட்டம் தீவிரமடையும் என எச்சரித்தனர்.

தலைப்புச்செய்திகள்